நாட்டு கோழி பற்றிய தகவல்கள்
மனிதன் நாடோடியாக இருந்த காலம் முதலே தன்னுடன் வளர்த்து வந்த ஒரே பறவை நாட்டு கோழி. அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கும் சக்தி உடையவை.
இவற்றில் இடத்திற்கு தக்கவாறு பல ரகங்கள் உள்ளன. நம் நாட்டில் பிரபலமான ரகங்கள். அசில்,பெருவிடை கோழி. சிறுவிடை கோழி. கடக்நாத் என்ற கருங்கோழி.
பெருவிடை கோழிகள் என்பவை பல ரகங்கள் உள்ளன. அசில். ' அதாவது கிளிமூக்கு விசிறி வால் .நாமக்கல் பகுதியில் உள்ள பெருவிடை கருங்கோழி. போன்றவை.
கிளி மூக்கு விசிறி வால் கோழிகள் அதிக பிரசித்தி மற்றும் விலை உயர்ந்தவை. இவற்றில் வெள்ளை நிற சேவல்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை விலை போக கூடியவை.
நாட்டு கோழிகளை பண்ணைகளில் வளர்ப்பது விட வெளியில் மேயவிட்டு வளர்ப்பது சிறந்தது. ஏனெனில் நாட்டு கோழிகள் அதிக தீவனம் உட்கொள்ளும். இரவில் மரங்கள் மீது அமர்த்துவது(பாதுகாப்பு இருந்தால்)நோய்கள் தாக்காது இருக்க வாய்ப்பு.
கோழிகள் மூலம் குஞ்சு பொறிப்பது சிறந்தது. 21 நாட்களில் பொரிக்கும். அடை முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது சிறந்தது. அடை வைப்பதற்கு ஐந்து மணி நேரம் முன்பு வெளியில் வைக்க வேண்டும்.
மஞ்சள் . வேப்பிலை மற்றும் சிறிதளவு தும்பை இலை இவற்றின் சாறு கலந்த தண்ணீர் ல் முட்டைகளை முக்கி எடுத்து அடை வைப்பதன் மூலம் முட்டைகளை தாக்கும் கிருமிகளில் இருந்து பாது காக்கலாம்.
பெருவிடை கோழிகள் பத்து முட்டைகளுக்கு மேல் இடாது.சிறுவிடை கோழிகள் அதிகபட்சம் 21 முட்டைகள் வரை இடும். தீவனத்தை பொருத்து.அடைகாக்க சிறுவிடை கோழிகளை பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் குஞ்சுகளை மிதிக்காமல் மற்றும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்.
கண்டிப்பாக மணலில் மட்டுமே கோழிகளை அடை வைக்க வேண்டும். ஏனெனில் புற ஒட்டுன்னிகளை தவிர்க்கலாம். மற்றும் அனைத்து முட்டைகளும் பொறிக்க வாய்ப்பு. 12 முட்டைகள் மட்டுமே ஒரு கோழியின் கீழே வைக்க வேண்டும்.
பெரும்பாலும் நாட்டு கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவை. ஆனாலும் தடுப்பூசி அளிப்பதன் மூலம் நூறு சதவீதம் நோய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற இயலும். இவற்றை அதிகம் தாக்கும் நோய்கள் வெள்ளை கழிசல் மற்றும் கோழி அம்மை.
கோழிகள் பருவத்தை அடைய குறைந்தது 150 நாட்கள் ஆகும். ஒரு மாத குஞ்சுகளை விற்பனை செய்வது அதிக லாபம். 1 _1/2 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்து விட வேண்டும்.
வாரம் நூறு நாட்டு கோழி முட்டைகளை விற்பனை செய்யும் அளவுக்கு இருந்தாலே இது ஒரு உபரி வருமானம்.
பெருவிடை சேவல் குஞ்சுகள் சிறு வயது முதலே சண்டை யிடுவதால் அவற்றை தனி தனியாக கூண்டில் அடைத்து வளர்ப்பது சிறந்தது.
பத்து முதல் பதினைந்து கோழிகளுக்கு ஒரு சேவல். தீவனம் நாமே தயார் செய்வது நல்லது . அசோலா மற்றும் தீவன புல் வகைகளை சிறு துண்டுகளாக வெட்டி போடுவதன் மூலம் கணிசமான அளவு தீவன செலவு குறையும்.
சிறு தானியங்கள் அதிகமாக கொடுக்கும் போது அதிக சுண்ணாம்பு சத்து கிடைக்கும். இதனால் கெட்டியான ஓடுகளை உடைய அதிக முட்டைகள் கிடைக்கும்.
மீன் அமிலம் தண்ணீர் ல் கலந்து அளிப்பதன் மூலம் கோழிகள் அதி வேகமான வளர்ச்சி அடையும்.
கிரிராஜா பெட்டை கோழிகளுடன் சண்டை சேவல் இனங்களை கலக்கும் போது அருமையான புதிய நாட்டு கோழி இனம் கிடைக்கிறது. இவை நாட்டு கோழியின் குணாதிசயங்களை பெற்று இருக்கும். அதிவேக வளர்ச்சி அடையும்.
வாரம் பத்து கோழிகளை விற்பனை செய்யும் அளவு வந்தாலே போதும். நீங்கள் அதில் வெற்றி அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
ஆட்டு இறைச்சியை விட அதிகமாக மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரே இறைச்சி இதுதான். சந்தையில் அதிக மதிப்பு மற்றும் தேடி வந்து வாங்கும் வாய்ப்பு.
No comments:
Post a Comment