மல்பெரி இலை ..!!
🍃 மல்பெரி இலை... இந்த பெயரை கேட்டவுடன் உங்களுக்கு பட்டுப்புழு பற்றி ஞாபகம் வருகிறதா?
🌿 இந்த மல்பெரி இலைக்கும், பட்டுப்புழுவுக்கும் என்ன சம்மந்தம் என்றும், மல்பெரி செடி பற்றியும் தெரிச்சுக்கலாம் வாங்க.
மல்பெரி செடியும், பட்டுப்புழுவும்:
🍃 பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை.
🌿 ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.
🍃 மல்பெரிச் செடியானது வருடம் முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது.
🌿 நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்கு மிகவும் ஏற்றதாகும். எனினும் மற்ற இடங்களிலும் மல்பெரிப்பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியும்.
மல்பெரி செடி சாகுபடி:
🍃 மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
விதைக்குச்சிகள் தேர்வு செய்யும் முறை:

🍃 ஒரு எக்டர் மல்பெரி தோட்டம் அமைக்கத் தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 20 சென்ட் நிலம் தேவை.
🍃 பு ச்சி, நோய் தாக்காத, ஆறு முதல் எட்டு வயது முதிர்வுடைய செடியிலிருந்து விதைக்குச்சிகளை தேர்வு செய்யவேண்டும்.
🌿 தேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3-4 பருக்கள் உடைய சிறு விதைக்குச்சிகளாகவும், 15-20 செ.மீ நீளமுள்ளதாக, வெட்டவேண்டும்.
🍃 வெட்டும்போது ஒவ்வொரு விதைக்குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப்பகுதியில் சாய்வாகவும், பட்டை உரியாமலும், பிளவுபடாமலும் வெட்டவேண்டும்.
🌿 மல்பெரியை ஒருமுறை பயிரிட்டால் 20 முதல் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
🍃 மல்பெரிச் செடியை சாதாரண (90 - 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாக நடவு செய்யலாம்.
பட்டுப்புழு வளர்ப்பு:
🍃 மல்பெரி குச்சி நடவு செய்த பின், சுமார் ஆறு மாதக் காலத்துக்குப் பின் பட்டுப்புழு வளர்த்தல் சிறந்தது.
🌿 பட்டுப்புழு வளர்ப்பு மாத வருமானம் தருவதாலும், ஒரு ஏக்கர் மல்பெரியில் பட்டுப்புழு வளர்த்தால் சராசரியாக ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை லாபம் கிடைக்கும்.
🍃 மல்பெரி செடிகளுக்கு இடையில் வளரும் களை செடிகளை நீக்குவதற்கு களைகொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்து இரண்டு, மூன்று முறை களையெடுப்பது அவசியம்.
ஊடுபயிர் தேர்வு:
🍃 ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது பயிரிடப்படும் பகுதி, பருவம், மண் வகைக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். குறுகிய காலப் பயிராக இருக்க வேண்டும்.
🌿 மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா, நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கும் பயறு வகைகளைத் தேர்வு செய்யலாம்.
🍃 பாசிப் பயறு, உளுந்து, கொள்ளு, கொண்டைக் கடலை, நிலக்கடலை, சின்ன வெங்காயம், கொத்தவரை, மிளகாய், தக்காளி, வெள்ளரி, பு சணி போன்ற பயிர்களைப் புதிய மல்பெரித் தோட்டத்தில் ஊடுபயிராகப் பயன்படுத்தலாம்.
🌿 சில ஊடுபயிர்கள், மல்பெரியைத் தாக்கும் பு ச்சியினங்களைக் கவர்ந்து தாக்குதலில் இருந்து காக்கின்றன.
🌿 தீமை தரும் பு ச்சிகளை அழிக்கும் இரை விழுங்கிகள், சிலந்தி போன்றவற்றின் செயல்பாட்டையும் ஊடுபயிர் ஊக்குவிக்கிறது.
🍃 எனவே, புதிதாக மல்பெரித் தோட்டம் அமைக்கும் விவசாயிகள் இதுபோல ஊடுபயிர் சாகுபடி செய்து பயனடையலாம்.
🍃 மல்பெரி வரிசைகளுக்கு இடையே ஐந்து அடி இடைவெளியில் தொடர்ந்து ஊடுபயிர் செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.
No comments:
Post a Comment