Saturday, September 30, 2017

வேப்பமரம் பற்றிய தகவல்

வேப்பமரம் பற்றிய தகவல்




இந்த பூமியில் உள்ளே மரங்களில், மனிதனுக்கு அதிகம் பயன்படக்கூடிய மற்றும் நன்மை செய்யக்கூடிய ஒரே மரம் வேம்பு. தெற்கு ஆசியாவில் அதிகம் காணப்படும். தென் இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரம்.

அதனால் தான் திரு ஐயா நம்மாழ்வார் அவர்களால் போராடி நம் நாட்டிற்காக காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகள் உயிர் வாழும் தன்மை உடையது.முதல் இரண்டு வருடங்களுக்கு வேப்ப மரங்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். பிறகு வேகமாக இருக்கும். வறட்சி தாங்கி வளரும்.

அந்த காலத்தில் நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது இதன் குணங்களை கண்டு வியந்து,  இதனை அழிக்க நினைத்தாக  கூறப்பட்டது.

அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஊர் ஐயனார் கோயில் முன் புறம் அரசமரம் மற்றும் வேப்ப மரம் ஆகிய இரண்டு கன்றுகளை இனைத்து ஒன்றாக நட்டு விடுவர் .

இதன் காரணம் என்னவென்றால் அரசமரம் தொடர்ந்து ஆக்சிஜன் ஐ வெளியிடும். கசப்பான வேப்பம் காற்று பல நோய்களையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலத்திலேயே முன்னோர்கள் கண்டறிந்தனர்.

ஏனெனில் அந்த காலத்தில் அம்மை நோயினால் இறப்பு அதிகம். இப்போது உள்ளது போல் தடுப்பூசிகள் இல்லை. அதனால் இந்த தடுப்பூசிகள் வேலையை அந்த காலத்தில் வேப்ப மரம் செய்தது.

இந்த காலத்தில் கூட பொன்னுக்கு வீங்கி என்ற தாடையில் ஏற்படும் அம்மைக்கு வேப்பிலை மஞ்சள் இரண்டும் கலந்து அரைத்து பூசப்பட்டு வருகிறது.

மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கால்நடைகளுக்கு

குடல் புழு நீக்க மருந்தாக பயன்படுகிறது.கால்நடைகளுக்கு கோமாரி நோய்கள் மூலமாக ஏற்படும் புண் களுக்கு வேப்பெண்ணை சிறந்த மருந்து.

 வேப்ப மரத்தில் இருந்து வெளிப்படும் காற்று மனித உடலில் ஏற்படும் அனைத்து நுன்கிருமி களால் ஏற்படும் நோய்களையும் தடுக்க வல்லது. வேப்பம்பூ ரசம் பல நோய்களையும் தீர்க்க வல்லது.

இனி வரும் காலங்களில் முழுவதும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதால் வேப்பெண்ணை யின் பயன்பாடு இல்லாமல் பூச்சி விரட்டிகள் இல்லை.

வேப்பம்புண்ணாக்கு நைட்ரஜன் சத்து மிகுந்த இயற்கை உரம் மற்றும் அனைத்து வேர் நோய்களையும் தடுக்க வல்லது. வேம்பு இல்லாமல் இனி விவசாயம் இல்லை என்ற நிலை இப்போது வந்து விட்டது.

வேப்பம் தழைகளை வெட்டி சேற்றில் இட்டு அமிழ்த்தி அந்த வயலில் நெல் நாற்று நடும் போது இளம் வயதில் பயிர்களை தாக்கும் அனைத்து நோய்களும் கட்டுப்படும்.

இம் மரங்கள் இளவேனில் காலத்திலேயே இலைகளை உதிர்த்து விடுவதால் நல்ல நிழலாக இருக்கும். இந்த காய்ந்த வேப்பிலை மூலம் தாயாரிக்கப்படும் மண் புழு உரம் சிறந்த சத்து வாய்ந்தது.

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு விவசாயி ம் தன் வயல்கள் ஓரம் தனக்கென்று குறைந்த பட்சம் ஐந்து வேப்ப மரங்களையாவது வளர்க்க வேண்டி வரும். வேப்பெண்ணை யின் பயன்பாடு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்.

😁வேப்ப மரங்கள் வைரம் பாய்ந்த பின் வெட்டி அவற்றை வீட்டு வாசக்கால் மற்றும் கதவுகள் செய்ய பயன்படுத்தலாம் .வண்டு தாக்குதல் இருக்காது. சிலர் வீட்டு உபயோக பொருட்களை யும் செய்கின்றனர்.

😀சக்கரை நோய்க்கு தினமும் காலையில் சில கொழுந்துகளை பறித்து உண்பதன் மூலம் கட்டுபடுத்த லாம். கோழிகளில் ஏற்படும் அம்மைக்கு வேப்பிலை, மஞ்சள் இரண்டும் அரு மருந்து.

😁கண்டிப்பாக நகரங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு வேப்பமரம் வளர்க்க வேண்டும். காக்கை மற்றும் சில பறவைகள் விரும்பி வேப்ப மரத்தில் தான் கூடு கட்டும்.

😀மறக்கன்றுகள் பரிசளிப்பவர்கள் கண்டிப்பாக மற்ற கன்றுகளுடன் வேப்பங் கன்றுகளையும்  பரிசாக அளிக்கலாம்.இவற்றின் பழங்களை காக்கை கள் விரும்பி உண்பதால்  இம் மரங்கள் பரவுவதற்கு முக்கிய பங்களிக்கின்றன.

😁எல்லா நோய்களையும்கட்டுப்படுத்தும் இந்த வேப்ப மரங்களையும் சில நோய்கள் தாக்குகின்றன.

No comments:

Post a Comment